districts

img

‘காலத்தால் கரையாத காட்சிகள்’ புகைப்பட கண்காட்சி

தமிழ்நாடு பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் சங்கத்தின் (டிஎன்பிபிஏ) சார்பில் ‘காலத்தால் கரையாத காட்சிகள்’ என்ற தலைப்பில் சென்னை எழும்பூரில் உள்ள லலித் கலா அகாடமியில் நடைபெறும் புகைப்பட கண்காட்சியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பார்வையிட்டார். பின்னர் அரிய இரண்டு புகைப்படங்களை சங்க நிர்வாகிகளிடம் வழங்கினார். உடன் மாநிலக் குழு உறுப்பினர் சுதிர், சங்கத்தின் தலைவர் ஜோதி ராமலிங்கம், பொருளாளர் அரி, நிர்வாகிகள் வேதன், சுரேஷ், முருகராஜ், அஸ்வின் ஆகியோர் உள்ளனர்.