என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஆட்சியில் புதுச்சேரியில் அதிகரித்துள்ள கஞ்சா போதை பொருட்களை தடை செய்யக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இளைஞர் காங்கிரஸ் , இளைஞர் பெருமன்றம் , மாணவர் சங்கம் , திமுக மாணவர் வாலிபர் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் சார்பில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. அண்ணாசாலை காமராஜர் சாலை சந்திப்பில் நடைபெற்ற பிரச்சாரத்தில் சங்கங்களின் நிர்வாகிகள் ஆனந்த், சஞ்சய், பிரவீன் குமார் ,மணிமாறன் , எழிலன் , அந்தோணி , ஆனந்த் பாபு உட்பட பலர் பங்கேற்று பேசினர்.