திருவள்ளூர், ஜூலை 5- கும்மிடிப்பூண்டியில் இளைஞர் தீ குளித்து இறந்த விவகாரத்தில் கவனக்குறைவாக செயல்பட்ட 3 அதி காரிகளை பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கும்மிடிப்பூண்டி அடுத்த கோட்டைகரை பகுதியைச் சேர்ந்தவர் தினகரன். இவரது மனைவி கல்யாணி. கணவனை இழந்த கல்யாணி தனது இரண்டு மகன்கள், மகளுடன் கும்மிடிப்பூண்டி அடுத்த கோட்டை கரை நேதாஜி நகர் 2ஆவது தெருவில் கடந்த 50 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் நிலையில், கல்யாணியின் ஏழ்மையை அறிந்த ஒரு தம்பதியர் தனக்கு சொந்தமான ஒன்னரை சென்ட் நிலத்தை கல்யாணிக்கு கொடுத்து விட்டு சென்னைக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கல்யாணியின் வீட்டின் பின்புறம் சிலர் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி வாழ்ந்து வருவதாகவும், அவர்களுக்கு சென்று வர இந்த இடத்தை கொடுக்கு மாறு மிரட்டல் விடுத்ததாதக் கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளிக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் இருந்த வட்டாட்சியர் கண்ணன் இடத்தை நேரடி யாக ஆய்வு செய்து அந்த இடம் பட்டா இடம், எனவே நீதிமன்றத்தை நாடி முறை யாக தீர்வு பெறுமாறு இரு தரப்பினரிடமும் எழுத்துப்பூர்வமாக தெரி வித்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த இடம் ஆக்கிரமிப்பு எனக் கூறி அதை அகற்ற வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை காவல் துறை, தீயணைப்புத்துறை மற்றும் மின்வாரிய அதி காரிகள் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். அப்போது கல்யாணியின் இளைய மகன் ராஜ்குமார் ஒரு வார காலம் அவகாசம் வழங்குமாறு அதிகாரிகளி டம் கோரிக்கை வைத்துள் ளார். ஆனால் மின்வாரிய அதிகாரிகள் அதிரடியாக வீட்டின் மின் இணைப்பை துண்டித்துள்ளனர். இதனால் மன உளைச்ச லுக்கு ஆளான ராஜ்குமார் வீட்டை பூட்டிக்கொண்டு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டு அதிகாரிகள் முன்னி லையில் தெருக்களில் ஓடி னார். அவரை காவல் துறை யினரும் தீயணைப்புத் துறையினரும் மீட்டு கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனு மதித்தனர். ஆனால் ராஜ குமாருக்கு 50 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டதால் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனு மதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் இளைஞர் தீக்குளிப்பு விவகாரத்தில் கவனக்குறைவாக செயல்பட்ட கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் ப்ரீத்தி, எளா வூர் வருவாய் ஆய்வா ளர் கோமதி, விஏஓ பாக்கிய ஷர்மா ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, 3 பேர் மீதும் ஒழுங்கு நட வடிக்கை எடுக்க ஆட்சி யர் பிரபுசங்கர் உத்தர விட்டுள்ளார்.