districts

img

வட சென்னையில் ஒரே நாளில் வாலிபர் சங்கத்தில் இணைந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள்

சென்னை, அக். 2- வட சென்னையில் ஒரே நாளில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில் தங்களை இணைத்துக்கொண்டனர். வட சென்னை பெரும்பாலும் உழைக்கும்  மக்கள் வசிக்கும் பகுதியாகும். இங்கு பல்வேறு இயக்கங்கள் செயல்பட்டு வருகிறது.அதிகரித்து வரும் போதைக் கலாச்சாரம், குற்றச் செயல்கள், காவல்துறை விதி மீறல்கள், விளையாட்டு மைதானங்கள், உபகரணங்கள் இல்லாமை, பள்ளி, கல்லூரி, பணியிடம் செல்ல  போதிய போக்குவரத்து வசதிகள் இல்லாமை என இளைஞர்கள் சந்திக்கும்  பிரச்சனைகள் ஏராளம். இந்த பிரச்சனை களின் மீது வாலிபர் சங்கம் தொடர்ந்து தலை யிட்டு வருகிறது. இந்நிலையில் அந்த அமைப்பின் உறுப்பினர் பதிவு ஞாயிறன்று (அக். 1) நடைபெற்றது. 40க்கும் மேற்பட்ட இடங்களில் 60க்கும் மேற்பட்ட குழுக்களில் 300க்கும் மேற்பட்ட இளைஞர்கள் நடத்திய உறுப்பினர் சேர்ப்பு இயக்கத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆர்வத்துடன் தங்களை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். மாதவரம் விநாயகபுரத்தில் முன்னாள் மாநிலச் செயலாளர் எஸ்.கே.மகேந்திரனும் .ஆர்.கே.நகர் கண்ணகி நகரில்  ஒன்றுபட்ட சென்னை மாவட்ட முன்னாள் தலைவர் டி.கே.சண்முகமும், பெரம்பூர் 44ஆவது வட்டத்தில் முன்னாள் மாநில துணைச் செயலாளர் அ.விஜயகுமாரும்,  திரு.வி.க  நகர்  புளியந்தோப்பு பகுதியில் முன்னாள் மாநில துணைத் தலைவர் கே.எஸ்.கார்த் தீஷ்குமாரும் உறுப்பினர் பதிவை தொடங்கி வைத்தனர்.