districts

img

காணும் பொங்கல் : வெள்ளி கடற்கரையில் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர்

கடலூர், ஜன.16-  காணும் பொங்கலை முன்னிட்டு கடலூர் தேவனாம்பட்டினம் வெள்ளி கடற்கரையில்  ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்தனர். சென்னை மெரினா கடற்கரைக்கு அடுத்து மிக நீளமான இரண்டாவது   கடற்கரையான கடலூர் தேவனாம்  பட்டினம் பகுதியில் அமைந்துள்ளது வெள்ளி கடற்கரைக்கு கடலூர் மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பல்லா யிரக்கணக்கான மக்கள் குவிந்தனர். அங்கு, பல்வேறு விளையாட்டுகள் விளையாடியதுடன் ஒட்டகம், குதிரை சவாரி சென்றனர். அதிக அளவில் கூட்டம் கூடியதால் போலீசாருடன் கடலோர பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் பொதுமக்கள் விழிப்புணர்வுடன், பாதுகாப்புடன் இருக்குமாறு ஒலிபெருக்கியில் அறிவுறுத்தினர். கடலின் சீற்றம் அதிகமாக இருந்ததால், பொதுமக்கள் குளிப்பதற்கு காவல்துறையினர் தடை விதித்திருந்தனர்.