சிதம்பரம் அருகே அண்ணாமலை நகர் பேரூராட்சிக்குட்பட்ட திருவேட்களம் பகுதியில் வறட்சி முன்னெச்சரிக்கை நடவடிக் கையாக 2023-24 பொது நிதி திட்டத்தின் கீழ் ரூ 29 லட்சம் செலவில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி துவங்கப்பட்டது. இப்பணியை பேரூராட்சி மன்றத் தலைவர் க.பழனி தலைமை தாங்கி துவக்கி வைத்தார். பேரூராட்சி மன்றத் துணைத் தலைவர் தமிழ்ச்செல்வி, செயல் அலுவலர் பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் தங்க.அன்பரசு, வேலு, விஜயலட்சுமி, சந்திரா, தேவிகா மற்றும் திமுக நிர்வாகிகள் முத்துக்குமார், ஆனந்தன், கருணாநிதி, செல்வராஜ், மணிமாறன், சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.