சிறுதானிய ஆண்டு 2023 முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் பா. முருகேஷ், சிறுதானியம் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, திருவண்ணாமலை நகராட்சி அண்ணா நுழைவு வாயில் முதல் காந்திநகர் மைதானம் வரை சைக்கிளில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்த நிகழ்வில், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ராமகிருஷ்ணன் மற்றும் துறை அலுவலர்கள் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர்.