திருவண்ணாமலை, செப். 25- திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை குறைதீர் கூட்டம் நடத்த வேண்டும், மாவட்ட ஆட்சியர் அலுவலக பேருந்து நிறுத்தத்தில் இருந்து இயங்கி வந்த மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டார் வண்டியை பழுது பார்த்து நீக்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ரமேஷ் பாபு தலைமை தாங்கினார், மாநில தலைவர் தோ.வில்சன், மாநில பொருளாளர் கே.ஆர்.சக்கரவர்த்தி, மாவட்ட செயலாளர் இரா.சிவாஜி, மாவட்ட பொருளாளர் சத்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.