மிக்ஜம் புயல், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருவான்மியூர் மார்க்கெட் மற்றும் மகளிர் பாலிடெக்னிக் சாலை பெண் வியாபாரிகளுக்கு சுமார் 1.40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குடை, மேசை உள்ளிட்ட உபகரணங்களை ‘பெண்கள் அறக்கட்டளை’ நிவாரணமாக வழங்கியது. இதனை அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் திவ்யா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், செயற்குழு உறுப்பினர் கே.வனஜகுமாரி, வேளச்சேரி பகுதிச் செயலாளர் எஸ்.முகமது ரஃபி உள்ளிட்டடோர் வழங்கினர்.