திருவள்ளூர், டிச.15- விளஞ்சியம்பாக்கம் குடியிருப்புகளை இடிக்கும் நடவடிக்கையை திருவள்ளூர் வருவாய்துறை கைவிட வேண்டும் என தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட சர்வே எண்.81, 92, 94-ல் உள்ள பாரதிதாசன் நகர், விளிஞ்சியம்பாக்கம் பகுதியில் கடந்த 90 வருடங்களுக்கு மேல் வேட்டைக்காரன் இன மக்கள் உட்பட அனைத்து சமூகத்தை சேர்ந்த 300 க்கும் மேற்பட்டோர் வீடு கட்டி வாழ்ந்து வருகின்றனர். இந்த வீடுகளுக்கு முறையாக நகராட்சி மூலம் வரி வசூல் செய்யப்படுகிறது. சாலை வசதி, மின் விளக்கு, குடிநீர், பாதாள சாக்கடை வசதி என அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. ஆதார் அட்டை, ரேசன் கார்டு போன்ற ஆவணங்களும் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த டிச 10 அன்று விளஞ்சியம்பாக்கம் பகுதியில் உள்ள 12 வீடுகள், கடைகளை திருவள்ளூர் கோட்டாச்சியர் நிர்வாகம் இடித்துள்ளது. மாணவர்கள் தேர்வு நேரத்தில் தங்கள் வீடு கள் இடிக்கப்பட்டு விடுமோ என்ற அதிர்ச்சி யில் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். சமூகத்தில் அனைத்து விதத்திலும் பின்தங்கியுள்ள விளஞ்சியம்பாக்கம் மக்களை பாதுகாக்கும் வகையில் குடி யிருப்புகளை அகற்றும் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி டிச 13 அன்று திருவள்ளூர் கோட்டாச்சிரிடம் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் மனு அளிக்கப்பட்டது. இதில் மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர். தமிழ் அரசு, தமிழ்நாடு வேட்டைக்காரன் பழங்குடி யினர் முன்னேற்ற சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் இ.கங்காதுரை, மாநில துணைத்தலைவர் ஏ.வி.சண்முகம், வேட்டைக்காரன் பழங்குடியினர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் வேழவேந் தன், சுகுமார், ஏழுமலை, டெல்லி கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.