districts

img

உள்ளாட்சி ஊழியர் சங்க திருவள்ளூர் மாவட்ட பொருளாளர் பழனி காலமானார்

திருவள்ளூர்,அக்.1- ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட பொருளாளர் ஏ.பழனி (வயது 48), காலமானார். திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர் சங்கத்தின் மாவட்ட பொருளாளரும், மாநில சம்மேளன குழு உறுப்பினர் மற்றும் எல்லா புரம் ஒன்றிய தலைவர்  ஏ.பழனி விபத்தில் படுகாய மடைந்து சென்னை ஸ்டான்லி மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த சூழலில் திங்களன்று (செப்.30), சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார். அவரின் உடலுக்கு உள்ளாட்சி ஊழியர் சங்கத்தின் மாநில தலைவர் ஏ.ஜி.சந்தானம், மாவட்ட தலைவர் பி.கதிர்வேல், சிபிஎம் மாவட்ட செயலாளர்  எஸ்.கோபால், வட்ட செய லாளர் ஏ.ஜி.கண்ணன், மாவட்ட குழு உறுப்பினர் கள் பி.ரவி (ஒன்றிய கவுக் சிலர்), பத்மா, கங்காதரன், கன்னியப்பன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். ஊத்துக்கோட்டை அருகில் உள்ள அவரது சொந்த ஊரான  செங்கரை கிராமத்தில் உள்ள மயானத் தில் திங்களன்று மாலை அடக்கம் செய்யப்பட்டது.