திருவள்ளூர், நவ. 29- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவள்ளூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.தமிழ்அரசு தந்தையார் பொ.ரத்தினம் ( வயது 78) கைவண்டூரில் உள்ள இல்லத்தில் வெள்ளியன்று காலமானார். அவரின் உடலுக்கு கட்சியின் மாநில குழு உறுப்பினர் ப.சுந்தரராசன், மாவட்ட செயலாளர் எஸ்.கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.பன்னீர்செல்வம், கே.விஜயன், ஏ.ஜி.கண்ணன், இ.மோகனா, திருவள்ளூர் வட்ட செயலாளர் எஸ்.கலையரசன், மாவட்ட குழு உறுப்பினர்கள் என்.கீதா, இ.எழிலரசன், என்.கங்காதரன், கன்னியப்பன், அப்சல் அகமது, அந்தோணி, மூத்த உறுப்பினர் கே.செல்வராஜ், சோழவரம் ஒன்றிய செயலாளர் அ.து.கோதண்டன், மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் இ.கங்காதரன், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில நிர்வாகி கே.வெங்கடேஸ்வரலு, மாவட்ட செயலாளர் பெ.ரூபன் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர். சொந்த ஊரான கைவண்டூரில் உள்ள மயானத்தில் அவரது உடல் வெள்ளியன்று அடக்கம் செய்யப்பட்டது. திருத்தம் வெள்ளிக்கிழமை (நவ.29) 8ஆம் பக்கத்தில் வெளியான டிஆர்இயூ பிரச்சார செய்தியில் சரவண பெருமாள் ஆர்.எல்.எல்.எப். பொதுச்செயலாளர் என வந்துள்ளதை டிவிஷன் செயலாளர் என வாசிக்கவும்.