districts

img

அறிவியல் இயக்க மாவட்ட மாநாடு

திருவள்ளூர், ஜன 9- தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் திருவள்ளூர் மாவட்ட 16 வது மாநாடு செங்குன்றத்தில் ஞாயிறன்று (ஜன.7) மாவட்டத் தலைவர் பி.ராஜகுரு தலைமை யில் நடைபெற்றது. இதில் மாவட்ட துணைத் தலைவர் எஸ்.குமார் வரவேற்றார்.மாநில பொதுக்குழு உறுப்பினர் ப.ஜெயநாராயணன், அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் சாந்தகுமாரி எத்திராசன் துவக்க உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் எஸ்.மோசஸ் பிரபு வேலை அறிக்கையையும், பொருளாளர் என்.சண்முக சுந்தரம்  வரவு, செலவு கணக்கையும் சமர்ப்பித்தனர். மாநில துணைத் தலைவர் என்.மாதவன் மாநாட்டை நிறைவு செய்து பேசினார். தீர்மானங்கள் பழவேற்காடு உள்ளிட்ட கடற்கரை ஓரங்களில் எண்ணை படலங்கள் கலந்ததை ஒட்டி, அதனை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அறிவியல் பாடப்பிரிவில் ஆர்வமுள்ள மாணவர்களை கண்டறிந்து இளம் விஞ்ஞானிகளாக உருவாக்கி பயிற்சி அளிக்க வேண்டும். அரசு பள்ளிகளில் தரமான ஆய்வு கூடங்கள் நிறுவ வேண்டும், பள்ளிகளில் பாதுகாக்கப்பட்ட  குடிநீர் வழங்க  வேண்டும், அரசு பள்ளிகளில் மாணவ மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கழிப்பறைகள் கட்டித்தர வேண்டும், கிராமப்புறங்களில் திறக்கப்படாமல் உள்ள நூலகங்களை திறக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.  புதிய நிர்வாகிகள் மாவட்ட தலைவராக எஸ்.குமார், மாவட்ட செயலாளராக ப.ஜெய நாராயணன், பொருளாளராக மருத்துவர் அனுரத்னா மற்றும் சிறப்பு தலைவராக சாந்தகுமாரி எத்திராசன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.