districts

img

போராட்டக்களம் நிறைந்த திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதி !

திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதி தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் 5வது  தொகுதியாகும். இந்த தொகுதி தமிழ்நாட்டின் மிகப்பெரிய மக்கள வைத் தொகுதிகளில் ஒன்றாகும். 2008 ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைக்குப் பின்பு திருப்பெரும்புதூர் தொகுதியில் மதுரவாயல், அம்பத்தூர், ஆலந்தூர், திருப்பெரும்புதூர், பல்லாவரம், தாம்பரம் ஆகிய ஆறு சட்டப்பேரவை தொகுதிகள் இடம்பெற்றுள்ளது. முன்பு தனித் (ரிசர்வ்)தொகுதியாக இருந்த திருப்பெரும்புதூர், தற்போது  பொதுத் தொகுதியாக மாற்றப்பட் டுள்ளது.

திருப்பெரும்புதூர் தொகுதி சிறப்பு அம்சம்

தமிழ்நாட்டில் உள்ள 32 பொது தொகுதிகளில் திருப்பெரும்புதூரும் ஒன்று. பல்லவர்கள் ஆண்ட பகுதி என்ற சிறப்பையும், புரட்சித்துறவி ராமானுஜர் பிறந்த பகுதி என பல  சிறப்புகள் கொண்ட இந்த தொகுதியில்  தான், தமிழ்நாட்டின் மிகப்பெரிய  ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரி சென்னை நகர மக்களுக்கு  முதன்மையான நீர்  ஆதாரங்களில் ஒன்றாகும். தமிழ கத்தில் அதிக அளவில் பன்னாட்டுத்  தொழிற்சாலைகளைக் கொண்டுள் ளது. திருப்பெரும்புதூர் பொருளா தார மண்டலம், அம்பத்தூர் தொழிற் பேட்டை, மீனம்பாக்கம் விமான நிலையம், மெப்ஸ் ஏற்றுமதி வளாகம் என பல முக்கியமான தொழில் வளங்களை கொண்டுள்ளது. ஆட்டோ மொபைல் தொழில்கள் இங்கு முக்கியப்பங்கு வகிக்கிறது. உதிரி பாகங்கள் தயாரிக்கும் சிறு, குறு  நிறுவனங்களும் அதிகளவில் இருக் கின்றன. நாட்டில் பல்வேறு நகரங்களி லிருந்து பன்னாட்டு நிறுவனங்களில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றும் இடமாக விளங்குகிறது. சென்னை புறநகரில் அதிகம் பேருக்கு வேலைவாய்ப்புகளை அளிக்கும் தொகுதியாகவும் இது உள்ளது.

தொகுதியின் பிரச்சனைகள்

இங்குள்ள தொழிற்சாலைகளில் பணி புரிகின்ற அனைத்து தொழி லாளர்களுக்கும் பணி பாதுகாப்பை அரசு உத்தரவாதப்படுத்த வேண்டும் என கோரி தொடர்ந்து  போராடி  வருகின்றனர். இங்குள்ள தொழில் நிறுவனங்களில் தயாரிக்கப்படும் வாகனங்கள், பொருட்களைத் துறைமுகத்துக்குக் கொண்டு செல்ல வசதியாக சென்னை துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம் இன்னும் நிறைவடையவில்லை.  சென்னை புறநகர் பகுதிகளைக் கொண்டுள்ள இந்தத் தொகுதியில் மக்கள்தொகை அதிகரித்து வருகிறது. எனவே, இந்தத் தொகுதியை  மையப்படுத்தி அரசு மருத்துவக் கல்லூரியை கொண்ட பன்னோக்கு மருத்துவமனை அமைக்க வேண்டு மென்பது நீண்ட காலக் கோரிக்கை யாக  உள்ளது.  திருபெரும்புதூர் நகரத்திற்குள் நெரிசலை தவிர்க்க ராஜீவ் காந்தி நினைவிடம் எதிரில்  மேம்பாலம் அமைக்க வைக்கப்பட வேண்டும். அடையாறு கால்வாய் பகுதி ஆக்கிர மிப்புகளை அகற்ற வேண்டும், தொழில்  நகரமான திருப்பெரும்புதூர் பகுதியை  சென்னை-காஞ்சிபுரம்- திருப்பெரும் புதூர் இணைக்கும் வகையில் ரயில் போக்குவரத்து வசதியை ஏற்படுத்த  வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளும் முக்கியத்துவம் பெறுகின்றன. 1962 ஆம் ஆண்டு உருவான திருப் பெரும்புதூர் தொகுதியில் இதுவரை  நடைபெற்ற மக்களவைத் தேர்தல்க ளில் திமுக 7 முறை வெற்றி பெற்றுள் ளது. கடந்த 2019ஆம் ஆண்டு நடை பெற்ற தேர்தலில் திமுக சார்பில் களம் கண்ட முன்னாள் ஒன்றிய அமைச் சர் டி.ஆர். பாலு 5 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மொத்தம் 7 லட்சத்து 93 ஆயிரத்து 281 வாக்குகளைப் பெற்றிருந்தார். அவரை எதிர்த்து அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் வைத்திலிங்கம் 2 லட்சத்து 85 ஆயிரத்து 326 வாக்கு களைப் பெற்றார். வாக்காளர்கள் விவரம் (2024): ஆண் வாக்காளர்கள் – 11லட்சத்து 69 ஆயிரத்து 344, பெண் வாக்காளர்கள் –  11லட்சத்து 88ஆயிரத்து 754 மூன்றாம்  பாலினத்தவர் – 428, மொத்த வாக் காளர்கள் – 23லட்சத்து 58ஆயிரத்து 526 ஆகும்.

இதுவரை வெற்றி பெற்றவர்கள்
1967 சிவசங்கரன் திமுக
1971 லட்சுமணன் திமுக
1977 சீராளன் ஜெகன்னாதன் அதிமுக
1980 நாகரத்தினம் திமுக
1984 மரகதம் சந்திரசேகர் அதிமுக
1989 மரகதம் சந்திரசேகர் அதிமுக
1991 மரகதம் சந்திரசேகர் அதிமுக
1996 நாகரத்தினம் திமுக
1998 வேணுகோபால் அதிமுக
1999 கிருட்டிணசாமி திமுக
2004 கிருட்டிணசாமி திமுக
2009 டி.ஆர். பாலு திமுக
2014 ராமச்சந்திரன் அதிமுக
2019 டி.ஆர். பாலு திமுக