வடபழனி நூறடி சாலை திருநகர் பேருந்து நிறுத்தத்தில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. நிறுத்தத்தின் அருகில் குப்பைத் தொட்டியும் வைக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் நடுச்சாலையில் சென்று நிற்கின்றனர். பேருந்துகளும் நடு ரோட்டில் நின்று பயணிகளை ஏற்றிச் செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.