districts

img

இந்தி மொழியை திணிக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கையை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி பொன்னேரியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

இந்திய தண்டனைச் சட்டத்தை,பாரதிய நியாய சன்ஹிதா - 2023 என மாற்றி இந்தி மொழியை திணிக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கையை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி வழக்கறிஞர்கள் வியாழனன்று (ஆக.24), பொன்னேரியில் ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின்  மாவட்டச் செயலாளர் காளமேகம், பார் அசோசியேஷன் நிர்வாகிகள்  தேவேந்திரன், வெங்கடேஸ்  வரலு, அட்வகேட் அசோசியேசன் நிர்வாகிகள் நெடுஞ்செழியன், லாயர்ஸ் அஸோசியேஷன் நிர்வாகிகள்  அசோக்குமார், மாசிலாமணி மற்றும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு மண்டல  நிர்வாகிகள் பாலமுருகன்,முரளிபாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.