districts

img

அரசு மருத்துவமனைகளில் சுகாதாரம் இல்லை !

கடலூர், ஆக.9- கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஊழியர்கள், மருத்து வர்கள், செவிலியர்கள் பற்றாக்குறையால் சேவை குறைபாடு உள்ளதாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது. மாதர் சங்கத்தினர் கடலூர், விருத்தா சலம், குறிஞ்சிப்பாடி, காட்டுமன்னார் கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அரசு மருத்துவமனைகளில் நேரடி கள ஆய்வு மேற்கொண்டனர்.  பின்னர், கடலூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். கடலூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர், செவிலியர், இதர ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள் போதுமான அளவுக்கு இல்லை. ஆகவே காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.  மேலும், ஆஷா பணியாளர்கள் இல்லை. பிரசவ வார்டில் போதுமான படுக்கை வசதிகள் கிடையாது. ஆனால், தரையில் படுக்க வைத்துள்ளனர்.  விருத்தாசலம் மருத்துவமனையில் சுகா தாரம் மிகவும் மோசமாக உள்ளது. மேல் சிகிச்சைக்காக வெளியில் செல்லும்போது ஆம்புலன்ஸ்க்கு டீசல் போடுவதற்கு நோயாளிகளிடம் பணம் கேட்கும் நிலை உள்ளது. குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் ஊழியர் பற்றாக்குறை உள்ளது. கடந்த காலங்களில் 9 மருத்துவர்கள் இருந்தனர். தற்போது 7 பேர் தான் பணியில் உள்ளனர். பராமரிப்பு ஊழியர்கள் 13 பேர் இருந்த நிலையில் தற்போது 5 பேர் மட்டுமே உள்ளனர்.  அதேபோல் காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் போதுமான ஊழியர்கள் இல்லை. சில நேரங்களில் ரத்தம் ஆக்சிஜன் கிடைப்பதில்லை. சிடி ஸ்கேன், எம் ஆர் ஐ ஸ்கேன் வசதியும் இல்லை. மருத்துவமனை சுகாதாரமான முறையில் பராமரிக்கப்படுவதில்லை. தண்ணீர் வசதியும், கழிப்பறை வசதியும் இருந்தாலும் சுகாதாரமாக இல்லை.  இவ்வாறு தெரிவித்துள்ளார்.