districts

சென்னை முக்கிய செய்திகள்

சென்னை மத்திய வட்டாரத்தில் உதிரி பாகங்கள் திருட்டு

சென்னை,ஆக.9- சென்னை மத்திய வட்டா ரத்துக்குட்பட்ட 5 மண்ட லங்களில் பழுதான வாகனங்கள் அமைந்த கரையில் சாலை யோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கேட்பாரற்ற நிலையில் நிறுத் தப்படும் வாகனங்களால், போக்குவரத்துக்கு இடை யூறு ஏற்படுவதாக மாநக ராட்சி அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் தெரி வித்தனர். அதன்பேரில், பல்வேறு இடங்களில் பழு தான நிலையில் சாலை யோரம் நிறுத்தப்பட்டிருந்த 2 மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மாநகராட்சி சார்பில் கைப்பற்றப்பட்டது. அவற்றை அமைந்தகரை பகுதியில் உள்ள மாந கராட்சிக்கு சொந்தமான இடத்தில் நிறுத்தி வைக் கப்பட்டுள்ளது. இந்நிலை யில், மர்ம நபர்கள் சிலர் கைப்பற்ற வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். மேலும், வாகனங்களில் இருந்த ஆடியோ சிஸ்டம், பேட்டரி, டயர்கள் உள்ளிட்ட பொருட்களை திருடிச்  சென்றதாக புகார் எழுந் துள்ளது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண் டும் என சமூக ஆர்வலர் கள் காவல்நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.

அர்ஜுன் சம்பத் வாய்த்துடுக்கு: அபராதம் விதித்த நீதிமன்றம்

சென்னை,ஆக.9- திரைப்பட நடிகர் விஜய்  சேதுபதி கடந்த 2021 ஆம்  ஆண்டு பேசிய கருத்து  சர்ச்சைக்குள்ளானது. நடிகர் விஜய் சேதுபதி,  பசும்பொன் முத்துராம லிங்க தேவரை பற்றி தவறாக  பேசியதாக தனது முகநூல்  பக்கத்தில் இந்து மக்கள்  கட்சி மாநில தலைவர்  அர்ஜுன் சம்பத் பதிவிட்டு இருந்தார். மேலும், “தேவர் ஐயாவை இழிவு படுத்திய நடிகர் விஜய் சேதுபதியை, உதைப்பவருக்கு ரொக்கப் பரிசாக ரூபாய் 1001 வழங்க ப்படும்” என்றும் பதிவிட்டி ருந்தார்.இந்நிலையில், அர்ஜுன் சம்பத்தின் இந்த சமூக வலைத்தள பதிவு தொடர்பாக கடந்த  17.11.2021 அன்று பெரிய  கடைவீதி காவல் நிலையத் தில் இந்திய தண்டனை சட்டம் 504 & 506 (I) பிரிவு களில் வழக்குப்பதிவு செய்து  விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் 2023 -ஆம் ஆண்டு நவம்பர் 27-ஆம் தேதி குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில், நீதிபதி சந்தோஷ் முன்பு ஆஜரான அர்ஜுன் சம்பத், தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இந்நிலையில் அவருக்கு தண்டணையாக ரூ.4,000 அபராதம் விதித்து நீதிபதி சந்தோஷ் உத்திரவிட்டார். இதனையடுத்து தண்டனை விதிக்கப்பட்ட அர்ஜுன் சம்பத், அபராதத்தினை நீதி மன்றத்தில் செலுத்தினார்.

தேசிய அளவில் தங்கப்பதக்கம்: வீராங்கனைக்கு ஆட்சியர் பாராட்டு

கள்ளக்குறிச்சி, ஆக.9- 7 வது தேசிய அளவிலான டேக்வாண்டோ விளையாட்டுப் போட்டி 2024,ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம் ராஜீவ் காந்தி விளையாட்டு அரங்கத்தில் ஆகஸ்ட் 2 முதல் 4 ஆம் தேதி வரை நடைபெற்றது. இப்போட்டியில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் தமிழ்நாடு சார்பில் பெண்கள் 176 செ.மீ. உயரத்திற்கு மேற்பட்ட பிரிவில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த, அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளி  மாணவி நசஷத்திரா பங்கேற்று தங்கப் பதக்கம் வென்றார். சொந்த ஊர் திரும்பிய மாணவி, தங்கப் பதக்கம் மற்றும் சான்றுடன் மாவட்ட ஆட்சியர் பிரசாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றார்.