திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம், தாமரைப்பாக்கத்தில் தீக்கதிர் சந்தா சேகரிப்பு இயக்கம் ஜூலை 1 அன்று துவங்கியது.முதல் கட்டமாக 11 ஆண்டு சந்தாக்கள் மற்றும் 6 மாத சந்தா 5 பெறப்பட்டுள்ளது. இதில் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.நம்புராஜன், தீக்கதிர் பொறுப்பாளர் கே.செல்வராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.பன்னீர்செல்வம், ஜி.சம்பத், வட்டச் செயலாளர் ஏ.ஜி.கண்ணன், மாவட்ட குழு உறுப்பினர்கள் பி.ரவி, என்.கங்காதரன், ஏ.பத்மா, வட்டக் குழு உறுப்பினர்கள் பழனி, அருள், சந்துரு, மணிவண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.