திருவண்ணாமலை, ஜூன் 20-
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவரும் நாடக இயக்குநரும், திரைப்பட நடிகரும், ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலருமான சி. காளிதாஸ் புகழஞ்சலி கூட்டம் திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள தமிழ்நாடு நில அளவை அலுவலர் ஒன்றிப்பு சங்க கட்டிடத்தில் நடைபெற்றது.
மாவட்டச் செயலாளர் மு. பாலாஜி தலைமை தாங்கினார். காளிதாஸ் படத்தை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செய லாளர் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா திறந்து வைத்து புகழ் அஞ்சலி செலுத்தி னார்.
காளிதாஸ் நினைவு குறிப்புகள் குறித்து நாடகவியலாளர் பிரளயன் உரை யாற்றினார். அரசு ஊழியர் சங்க, கிராம நிர்வாக அலுவலர் சங்க, அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட, வட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.