districts

img

தீக்கதிர் செய்தி எதிரொலி: நியாயவிலைக் கடை திறப்பு

சென்னை மாநகராட்சி, 121வது வட்டம், ரோட்டரி நகர் முதல் தெருவில் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் உள்ள நியாயவிலைக் கடை கட்டிடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி தொடர் நடவடிக்கை எடுத்து வந்தது. இதுகுறித்த செய்தி ஜூலை 9ந் தேதி தீக்கதிர் நாளிதழில் வெளியிடப்பட்டது. இதனையடுத்து நியாய விலைக்கடை புதனன்று (ஜூலை 24) திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.