பக்கிங்காம் கால்வாயை மழைக்காலம் வருவதற்கு முன்பு தூர்வார வேண்டும் என்று மாமன்ற உறுப்பினர் பா.விமலா மண்டல கலந்தாய்வு கூட்டத்தில் கோரிக்கை விடுத்ததையொட்டி ஞாயிறன்று (அக். 2) தூர்வாரும் பணியை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஆய்வு செய்தார்.மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி, மேயர் பிரியா, சட்டமன்ற உறுப்பினர் ஜே.ஜே.எபிநேசர், மண்டலக் குழு தலைவர் யூ.கணே சன், மாமன்ற உறுப்பினர் பா.விமலா ஆகியோர் உடன் இருந்தனர்.