districts

img

வீட்டுமனை பட்டா கேட்டு நடத்திய காத்திருப்பு போராட்டம் வெற்றி

உளுந்தூர்பேட்டை, செப். 8-   வீட்டுமனைப் பட்டாக்களை கிராம  கணக்கில் பதிவு செய்து அளந்து  முறை யான பட்டா வழங்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்  உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவ லகம் முன்பு  செவ்வாயன்று (செப் 7)  காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. சிபிஎம் ஒன்றிய செயலாளர் ஆர்.சீனி வாசன் தலைமை தாங்கினார். மாநி லக்குழு உறுப்பினர் ஜி.ஆனந்தன், மாவட்டச் செயலாளர் டி.ஏழுமலை, செயற்குழு உறுப்பினர்கள் டி.எம்.ஜெய்  சங்கர், டி.எஸ்.மோகன், நகர செயலா ளர் கே.தங்கராசு, திருநாவலூர் கிழக்கு  ஒன்றிய செயலாளர் ஜெ.ஜெயக் குமார், மாவட்டக்குழு உறுப்பினர் வி.ரகு ராமன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.   போராட்டத்தின் இடையே தலை வர்களை வட்டாட்சியர்  பேச்சுநடத்த அழைப்புவிடுத்தார். மேலும் பட்டா தயாராக உள்ளதாகவும்  விரைவில் இவை உரிய பயனாளிகளுக்கு வழங் கப்படும் என கூறினார். இதன்பின் போராட்டத்தில் பங்கேற்றுள்ள பய னாளிகளுக்கு மத்தியில்  பெயர் பட்டி யலை அறிவிக்க வேண்டும் என  கட்சித்  தலைவர்கள் வலியுறுத்தியதன் காரண மாக வட்ட நிர்வாகம் சார்பில் போராட்ட பந்தலுக்கு வந்து பயனாளிகளின் பெயர்  பட்டியல் அறிவிக்கப்பட்டது. விரைவில் பட்டாக்கள், பயனாளி களுக்கு வழங்கப்படும் எனவும் வட்ட  நிர்வாகம் சார்பில் உறுதி அளிக்கப்பட்ட தால் போராட்டம் நிறைவு செய்யப் பட்டது.

;