districts

img

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் 2 ஆண்டுகள் தொடர் இயக்கம்  நடத்தி கோரிக்கைகளை வென்றெடுத்துள்ளது. இதனையடுத்து முருகமங்கலத்தில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் 3 கிளைகள் உதயமானது. இந்த கிளைகளின் கொடியை ஏற்றி, பெயர்ப்பலகையை சங்கத்தின் மாநிலத் தலைவர் தோ.வில்சன் திறந்து வைத்தார். இந்நிகழ் வில் சங்கத்தின் தென்சென்னை மாவட்டத் தலைவர் அ.கிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் எம்.குமார், துணை தலைவர் என்.சாந்தி, தாம்பரம் பகுதி தலைவர் ஜெ.மைதிலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.