districts

img

வாடகைதாரர், வாரிசுகளுக்கும் வீடு வழங்க வேண்டும் வாரிய மேலாண்மை இயக்குநரிடம் சிபிஎம் வலியுறுத்தல்

சென்னை, ஜன. 20 - பிஆர்என் பகுதியில் மறுகட்டுமான செய்யப்பட உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வாடகை தாரர்கள், வாரிசுகளுக்கும் வீடு வழங்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.  துறைமுகம் தொகுதி, 56வது வட்டத்தில் பிஆர்என் கார்டன் உள்ளது. இங்கு நகர்ப்புற வாழ்விட மேம் பாட்டு வாரிய வீடுகள், குடிசை வீடுகள், மாநக ராட்சி வழங்கிய வீடுகள்  என உள்ளன. இவர்கள் அனைவரையும் ஒருங்கி ணைத்து, வாரியம் புதிய வீடு களை கட்டிக் கொடுக்க உள்ளது. இதன்படி, அந்தப் பகுதியில் வசிப்பவர்களை மறுகுடியமர்வு செய்ய, வாரியம் கணக்கெடுப்பு நடத்தி உள்ளது. இதில், நீண்ட காலமாக அந்தப் பகுதியில் வசித்து வரும்  வாடகைதாரர்கள் மற்றும்  வாரிசுதாரர்கள் கணக்கெ டுப்பில் சேர்க்கவில்லை. எனவே, வாடகைதாரர்கள், வாரிசுகளுக்கும் வீடு வழங்க மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக பாதிக் கப்பட்ட மக்களுடன் சென்று  மார்க்சிஸ்ட் கட்சித் தலை வர்கள் மத்தியசென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் இரா.முரளி, துறைமுகம் பகுதிச் செய லாளர் எம்.ஜலாலுதீன் ஆகி யோர் வாரிய மேலாண்மை இயக்குநர் கோவிந்தரா விடம் மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட மேலாண்மை இயக்குநர், இதுதொடர்பாக பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்ப தாக உறுதி அளித்தார். இந்நிகழ்வின்போது, கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் ஆர்.அருள் குமார், பகுதி குழு உறுப்பி னர் வடிவேல் மற்றும் சுந்தரம் ஆகியோர் உடனி ருந்தனர்.