செங்கல்பட்டு, மார்ச் 14- செங்கல்பட்டில் ரூ.15 கோடியில் அமைய உள்ள மாவட்ட விளையட்டு அரங்கத்திற்கான அடிக்கல்லை இளைஞர் நலன் மற்றும் விளை யாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாட்டிவைத்தார். கலைஞர் நூற்றாண்டு பொன் விழாவை சிறப்பித்திடும் வகை யில் வியாழனன்று (மார்ச் 14) செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 359 கிராம ஊராட்சிகளுக்கும் காஞ்சி புரம் மாவட்டத்தில் உள்ள 274 கிராம ஊராட்சிகளுக்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 784 விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய தொகுப்பை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலிருந்து ஏராளமான விளையாட்டு வீரர்களை நம்முடைய தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் வழங்கி உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தை சார்ந்த வீல்சேர் பென்சிங் வீராங்கனை சங்கீதா ஒடிசாவில் நடந்து நேஷனல் வீல்சேர் பென்சிங் சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம் வென்றார். அது மட்டுமல்லாமல் கடந்த ஆண்டு ஹரி யானாவில் நடைபெற்ற நேஷனல் வீல்சேர் பென்சிங் சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம் வென்றவர் சங்கீதா. இவருக்கு 3 விழுக்காடு விளையாட்டு இட ஒதுக்கீட்டின் மூலம் வணிக வரித் துறையில் இளநிலை உதவியாளர் பணி வழங்கப்பட்டது.
நம்முடைய அரசும், விளையாட்டுத் துறையும் என்றும் விளையாட்டு வீரர்களுக்கு துணை நிற்கும். சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கங்களை வெல்லுகின்ற நம்முடைய வீரர், வீராங்கனைகளுக்கு தொடர்ந்து உயரிய ஊக்கத் தொகையினை வழங்கி வருகின்றோம். விளையாட்டுத் துறை வளர்ச்சி என்பது நகரங்களில் மட்டும் இருப்பது அல்ல. கிராமங்களுக்கும் சென்றடைய வேண்டும். கிராமங்க ளிலிருந்து நிறைய விளையாட்டு திறமையாளர்கள் வர வேண்டும் என்பதற்காக தான் இந்த கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் திட்டத்தை நாங்கள் தொடங்கி இருக்கின்றோம் என்றார். இதன் தொடர்ச்சியாக செங்கல் பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி களுக்கும் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் கொண்டு செல்லும் வாகனத்தை கொடியசைத்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறு வனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் க.சுந்தர், சி.வி.எம்.பி. எழிலரசன், எஸ்.ஆர்.ராஜா, ஐ.கருணாநிதி, எம்.வரலட்சுமி,எஸ்.எஸ்.பாலாஜி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜே.மேகநாதரெட்டி, தாம்பரம் மாநக ராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக் கண்ணன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி, தாம்பரம் மாநகராட்சி துணை மேயர் காமராஜ், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.