கலை பண்பாட்டுத் துறையின் கீழ் புதுச்சேரி தமிழ் வளர்ச்சி சிறகம் மீண்டும் செயற்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற பேராசிரியர் கலைமாமணி இரா.வாசுகி சிறப்பு அதிகாரியாகவும் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதற்கான ஆணையை முதல்வர் ரங்கசாமி சட்டப்பேரவையில் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் இரா.சிவா,நாஜிம்,எம்.எல்.ஏ., உள்ளிட்டோர் உடனிருந்தனர்.