districts

img

மாற்றுத்திறனாளிகள் மனு கொடுக்கும் போராட்டம்

மாற்றுத்திறனாளிகளுக்கு ரேசன் அட்டை, இலவச வீட்டுமனைப் பட்டா, கழிவறை வசதி, 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க கோரி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாவட்டச் செயலாளர் ரமேஷ் பாபு, தலைவர் சிவாஜி, பொருளாளர் சத்யா ஆகியோர் பங்கேற்றனர். சிபிஎம் மாவட்டச் செயலாளர் எம். சிவக்குமார், வழக்கறிஞர் எஸ் .அபிராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.