தேர்தல் ஆதாயத்திற்காக பாஜக தூண்டிவிட்ட இனக் கலவரத்தால் மணிப்பூர் மாநிலம் அமைதியை இழந்து நிற்கிறது. இந்நிலையில் மணிப்பூர் பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் அந்த மாநிலத்தில் நடந்து வரும் வன்முறை சம்பவங்களை தடுத்து நிறுத்தி மீண்டும் அமைதியை நிலை நாட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மணிப்பூர் மாநில மாணவர் அமைப்பின் தலைவர்கள் திங்களன்று (ஜூலை 17) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணனை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.