சென்னை, ஜூலை 30 - சாலைகளில் சுற்றித்திரி யும் மாடுகளுக்கான அபராத தொகை ரூ.15 ஆயிரம் வரை உயர்த்தப் பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் செவ்வாயன்று (ஜூலை 30) ரிப்பன் மாளி கையில் மேயர் ஆர்.பிரியா தலைமையில் நடை பெற்றது. இந்தக் கூட்டத்தில் பிஎஸ்பி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கப் பட்டது. இதனைத் தொடர்ந்து, தமிழகத்தை புறக்கணிக்கும் ஒன்றிய அரசின் பட்ஜெட் நகலை மதிமுக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் கிழித்து எதிர்ப்பு தெரிவித்தனர். சாலையில் மாடுகள் சுற்றித் திரிவதை கட்டுப்படுத்த உரிமையாளர்களுக்கு மாநகராட்சி அபராதம் விதிக்கிறது. முதல்முறை யாக பிடிபடும்போது 5 ஆயிரம் ரூபாயிலிருந்து 10 ஆயிரம் ரூபாயாகவும், அதே மாடு இரண்டாவது முறையாக பிடிக்கப்பட்டால் 15 ஆயிரம் ரூபாயாகவும் அபராதமாகவும் வசூலிக்கப் படும். மேலும், பராமரிப்பு செலவிற்கு மூன்றாம் நாளில் இருந்து, நாள் ஒன்றுக்கு 1000 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்படும். சாலையோர வாகன நிறுத்தத்தில் கட்டணம் வசூலிக்க தமிழ்நாடு முன்னாள் படைவீரர் கழகத்திற்கு அனுமதி அளிக்கப்படும். இதன்படி கட்டணத்தில் மாநகராட் சிக்கு 70 விழுக்காடும், படை வீரர் கழகத்திற்கு 30 விழுக்காடும் தரப்படும். 47 வாகன நிறுத்த இடங்களி லும் இரு சக்கர வாகனத் திற்கு மணிக்கு ரூ.5, நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.20 என்றும், பாண்டி பாஜர் சாலையில் இரு சக்கர வாகனத்திற்கு ரூ.20, நான்கு சக்கர வாகனத்திற்கு ரூ.60 கட்டணம் நிர்ணயிக் கப்பட்டுள்ளது சாலை விரிவாக்கம் கிண்டி ரேஸ் கோர்ஸ் சாலையில் கிண்டி பாலம் முதல் சக்கரபாணி தெரு வரை சாலையை அகலப் படுத்தும் பணிக்கு ரூ.16.87 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. மாநகராட்சியில் இயங்கும் 353 அம்மா உணவகங்களுக்கு தேவை யான பொருட்கள் ரூ.7 கோடி செலவில் வாங்கப்பட உள்ளது.