சிதம்பரம், மார்ச் 13- சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட கொத்தட்டை கிராமத்தில் இருளர் மக்கள் 11 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சாதி சான்று இல்லா மல் பிள்ளைகளை பள்ளியில் படிக்கவைக்க முடியவில்லை யென்றும், சாதி சான்று கேட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பல முறை மனுகொடுத்தும் எந்த பலனும் இல்லை. சாதிசான்று பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்போதைய பரங்கிப் பேட்டை ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு உள்ளிட்ட கட்சியினரிடம் கூறியுள்ளனர். இதனைதொடர்ந்து சிதம்பரம் சார் ஆட்சி யரிடம் இவர்களின் நிலமையைக்கூறி சாதி சான்று வாங்கி கொடுத்தனர். மேலும் 11 குடும்பத்தை சார்ந்தவர்களுக்கு அரசு சார்பில் வழங்கப்பட்ட இடத்தை மாற்று சமூ கத்தினர் ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்து வருகின்றனர். அரசு தொகுப்பு வீடு கட்டுவதற்கு அந்த இடத்தை கேட்டப்போது ஊராட்சி நிர்வாகம் அவர்களை சமாதனம் செய்து வாய்கால் கரையில் 7 பேருக்கு வீடு கட்டி கொடுத்தது. மீதமுள்ள குடும்பங்கள் குடிசை அமைத்து வசித்து வருவதாகவும் அரசு வழங்கிய இடத்தை மீட்டுத்தருமாறும் கோரிக்கை விடுத்தனர். இதனைதொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பரங்கிப்பேட்டை ஒன்றியக் குழு தீவிரமாக செயல்பட்டு இருளர் மக்க ளுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தை பெற்று தந்த னர். இதற்கு அப்பகுதியில் உள்ள பொது மக்கள் பட்டாசு வெடித்து ஆரவாரம் செய்து அந்த இடத்திற்கு செங்கொடி நகர் எனப் பெயர் வைத்தனர். நகரின் பெயர் பலகையை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் உ.வாசுகி திறந்துவைத்தார். இந்த நிலை யில் மீட்கப்பட்ட இடத்தில் அரசு சார்பில் கான்கிரீட் வீடு கட்டித் தர வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தது. அதனைத்தொடர்ந்து முதல் கட்டமாக பழங்குடியினர் சிறப்பு திட்டத்தின் கீழ் ஒரு வீட்டிற்கு ரூ 4 லட்சம் 60 ஆயிரம் மதிப்பில் புதிய வீடுகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கோ. மாதவன், மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, பரங்கிப்பேட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் விஜய் உள்ளிட்ட கட்சி யினர் பார்வையிட்டு பணிகளின் தரம் குறித்து அப்பகுதி மக்களிடம் கேட்டறிந்தனர். இந்த இடத்துக்கு செங்கொடி இயக்கம் முயற்சி எடுக்கவில்லையென்றால் எங்களின் வாழ்வே கேள்விகுறியாக இருந்திருக்கும். இவர்கள் சாதிச் சான்று வாங்கி கொடுத்ததால் முதல் முறையாக எங்கள் பிள்ளை திருப்பூ ரில் உள்ள கல்லூரியில் டிப்ளமோ நர்சிங் கல்வி பயின்று வருகின்றனர். மேலும் அனை வருக்கும் பள்ளி கல்வி கிடைத்து வருவதாக நன்றியோடு செங்கொடி இயக்கத்திற்கு நன்றி தெரிவித்தனர். தற்போது 4 கான்கிரீட் வீடுகள் முதல்கட்டமாக கட்டப்பட்டு வருகிறது. மீதமுள்ளவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் வீடுகள் கட்ட அரசை வலியுறுத்துவோம் என மாநிலக்குழு உறுப்பினர் ரமேஷ்பாபு கூறி னார். - ஏ.காளிதாஸ்