கள்ளக்குறிச்சி,டிச.14- ‘ஒடுக்குமுறையற்ற ஊர்கள் சமத்து வமான மனங்கள்’ என்கிற முழக்கத் தோடும் இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை வழங்கக் கோரியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருசக்கர வாகன பிரச்சார இயக்கம் நடைபெற்றது. சந்தப்பேட்டை முதல் பகண்டை கூட்டுச்சாலை வரை நடைபெற்ற இந்த பிரச்சாரத்தின் நிறைவாக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்டத் தலைவர் மு.சிவக்குமார் தலைமை தாங்கினார். இதில் மாநிலத் தலைவர் எஸ்.கார்த்திக் உரையாற்றி னார். அப்போது, முழுக்க விவசாயத் தையும், விவசாயத் தொழிலையும் நம்பி யுள்ள இந்த மாவட்டத்தில் படித்து வேலையில்லாமல் வெளியூர் களுக்கும் மாநிலங்களுக்கும் வேலை தேடிச் செல்லும் இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித் துக்கொண்டே செல்கிறது. இதனால், இம் மாவட்டத்தில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். புதிதாக தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மாநில இணைச் செயலாளர் செல்வராஜ், மாவட்டச் செயலாளர் எம்.கே.பழனி, மாவட்ட துணைச் செய லாளர் உத்திரக்கோட்டி, மாவட்டத் துணைத் தலைவர் வெங்கடேசன், சங்க ராபுரம் ஒன்றியச் செயலாளர் முரளி, ரிஷிவந்தியம் ஒன்றியச் செயலாளர் சுந்தர மூர்த்தி, ஒன்றியத் தலைவர் தமிழ்ச் செல்வன், ஒன்றியப் பொரு ளாளர் விஷ்ணு உள்ளிட்டோர் பிரச்சார த்தின் நோக்கத்தை விளக்கி பேசினர்.