districts

img

வள்ளீஸ்வரன் தோட்டம் மக்கள் குடிநீர் கேட்டு சாலை மறியல்

சென்னை,ஜன.28 - குடிநீர் கேட்டு மயிலாப்பூர் வள்ளீஸ்வ ரன் தோட்டம் மக்கள் செவ்வாயன்று (ஜன.28) சாலை மறியலில் ஈடுபட்டனர். மயிலாப்பூர் தொகுதி, ராஜா அண்ணா மலைபுரம் பகுதி வள்ளீஸ்வரன் தோட்டத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடி யிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பு ஓராண்டிற்கு முன்பு திறக்கப்பட்டது. 630 குடும்பங்கள் வசிக்கின்றன. இந்த குடியிருப்புக்கு தினசரி 2.40 லட்சம் லிட்டர் தண்ணீரை குடிநீர் வாரியம் வழங்கி வந்தது. கடந்த சில நாட்களாக வாரியம் தண்ணீர் தராததால், அங்குள்ள மக்கள் காமராஜர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். “அண்மைக் காலமாக 1.20 லட்சம் லிட்டர் தண்ணீரை மட்டுமே வாரி யம் தருகிறது. லாரிகள் மூலமாக அவ்வப்போது கூடுதல் தண்ணீரை கொடுத்தது. பராமரிப்பு பணியை காரணம் காட்டி இரண்டு நாட்களாக தண்ணீர் தரவில்லை. இதனால் 40ஆயிரம் ரூபாய் செலவு செய்து தண்ணீர் வாங்கினோம். அதற்கு பிறகும் தண்ணீர் தராததால் மறியலில் ஈடுபடுகிறோம்” என்று குடியிருப்புவாசிகள் தெரிவித்தனர். இதனையடுத்து குடியிருப்போர் சங்க கூட்டமைப்பு நிர்வாகிகளிடம் காவல்துறை, குடிநீர் வாரிய அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். தடையின்றி குறைவின்றி தண்ணீர் வழங்க ஒப்புக் கொண்டனர்.