திருவண்ணாமலை, டிச.3- திருவண்ணாமலை மாவட்டத்தில் பெஞ்சால் புயல் காரணமாக கடந்த நான்கு நாட்களாக கனமழை பெய்தது. பொது மக்கள், விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு ஆளாகினர். மாவட்டத்தின் பல்வேறு பகுதி களில் குடியிருப்புகளில் மழை வெள்ளம் சூழ்ந்து நின்றது. நெல், வாழை உள்ளிட்ட சாகுபடி பயிர்கள் சேதமானது. வீடுகள், மாட்டு கொட்டகைகள் சேதமானது. புயல் மழை வெள்ள பாதிப்புகளின் போது, பல்வேறு இன்னல்கள், துயரங்களுக்கு ஆளான விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் புகார் அளித்தும், அரசு அதிகாரிகள் யாரும் எட்டிப் பார்க்கவில்லை. மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. இதையடுத்து, தொடர்பு கொண்ட 10 77 மற்றும் 041752 32377 இரண்டு எண்ணுமே வேலை செய்யவில்லை. தொடர்ந்து மழை வெள்ள பாதிப்புகளில் தவித்து வரும் பொதுமக்கள் மற்றும் விவ சாயிகளுக்கு உரிய நிவாரணம் அளிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் திரு வண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுக்கா, குப்பநத்தம் பகுதியில் புயல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல் சாகுபடி பயிரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் பி. கணபதி, ஏ. லட்சு மணன், சி.எம். பிரகாஷ் உள்ளிட்டோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.