districts

img

மாணவி கீர்த்தனாவின் மரணத்திற்கு நீதி கேட்டு ஊர் மக்கள் மனு அளிப்பு

சென்னை, செப். 26- தண்டையார் பேட்டையில் உள்ள முருக தனுஷ்கோடி பள்ளி மாணவி கீர்த்தனாவின் மரணத்திற்கு நீதி கேட்டு இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஊர்கூடி மனு அளிக்கும் போராட்டம் செவ்வாயன்று (செப். 26) நடை பெற்றது. போராட்டத்தின் நிறைவில் காவல்துறை துணை ஆணையர் சக்திவேலை சந்தித்து சங்க நிர்வாகிகள் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: முருக தனுஷ்கோடி பெண்கள் பள்ளியில் 12ஆம் வகுப்பு வணிகவியல் படித்து வந்த மாணவி கீர்த்தனா கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டு மர்மான முறையில் தற்கொலை செய்து கொண்டார். காவல்துறை விசாரணையில் மாணவி யின் புத்தக பையில் தனது மரணத்திற்கு பொருளியல் ஆசிரியைதான் காரணம் என்று குறிப்பிட்டு மாணவியின் கைப்பட எழுதப்பட்ட கடிதம் கிடைத்துள்ளது. கீர்த்த னாவின் கையெழுத்தை வைத்து தொடர்ந்து  அந்த மாணவியை பொருளாதார ஆசிரியை சக மாணவர்கள் முன்னிலையில் கேலி செய்தது தெரிய வந்துள்ளது.  மாணவர்கள் மனம் வருந்தும் எந்தவித வார்த்தைகளையும் வகுப்பறையில் ஆசிரி யர்கள் பயன்படுத்தக்கூடாது என்ற மாநில அரசின் விதிமுறையை ஆசிரியர் மீறி இருக்கி றார். இதனல் அந்த மாணவி மனமுடைந்து தற்கொலை முடிவை எடுத்துள்ளார். மாணவி யின் மரணம் நிகழ்ந்து 30 நாட்களுக்கு மேலாகி யும் தற்போது வரை காவல்துறை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இத்தகைய செயல் காவல்துறையின் மெத்தனப்போக்கையே காட்டுகிறது. உடன டியாக மாணவியின் மரணத்திற்கு காரண மான பொருளாதார ஆசிரியை மீது சட்டப் படி நடவடிக்கை  எடுக்கவேண்டும். கீர்த்த னாவை பிரிந்து வாழும் அவர்களின் குடும்பத்திற்கு நீதி வழங்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுவை பெற்றுக் கொண்ட துணை ஆணையர், உரிய விசாரணை நடத்தி உறுதி யாக அடுத்த 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். இதில் காவியா, நிதிஷ்குமார், குண சேகர் (மாணவர் சங்கம்), பா.விமலா, சரிதா,  பிரவீனா (மாதர் சங்கம்), விஜி (வாலிபர் சங்கம்), ஆர்.லோகநாதன், வெ.ரவிக் குமார், வெங்கட் (சிஐடியு), மாணவியின் தாயார் மேனகா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக ஜீவா பூங்கா அருகில் இருந்து ஊர்வலமாக வந்த னர். இதுகுறித்து மாணவியின் தாய் மேனகா செய்தியாளர்களிடம் கூறுகையில், காவல்துறை இணை ஆணையர் அலுவல கத்தில்  இரண்டு முறை  புகார் அளித்தும் இது வரை நடவடிக்கை எடுக்கவில்லை. இணை ஆணையர் சாமுண்டீஸ்வரி இதுபோன்ற சிறு  விஷயங்களுக்கு தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு குழந்தையை வளர்த்திருக்கிறாயே, உன் மகளுக்கு மன நிலை சரியில்லை என்று கூறுகிறார். மேலும் என்னைக் கூடத்தான் எனது அலுவலகத்தில் திட்டுவார்கள் அதற்காக நான் தற்கொலை செய்து கொள்ள முடியுமா எனக் கேட்கி றார்.  10ஆம் வகுப்பில் 406 மதிப்பெண்களும், 11ஆம் வகுப்பில் 486 மதிப்பெண்களும் பெற்றுள்ள மாணவியை பார்த்து மன நிலை சரியில்லை என்று கூறுகிறார் என வேதனை யுடன் கண்ணீர் மல்க தெரிவித்தார். மேலும் இதுபோல் வேறு ஒரு மாணவிக்கு நிகழக் கூடாது என்பதுதான் எனது வேண்டுகோள் என்றார்.