பன்னீர்வாக்கம் மக்கள் மீண்டும் போராட முடிவு
திருவள்ளூர், பிப் 3- திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அருகிலுள்ள பன்னீர்வாக்கத்தில் கிராம நத்தத்தில்வாழும் வேட்டைக்காரன் இன மக்கள் 47 குடும்பங்களுக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பாக பட்டாக்கள் வழங்கப் பட்டது. இதனை கிராம கணக்கில் பதிவேற்றம் செய்ய வேண்டும், கிராம நத்தத்தில் வசிக்கும் 17 குடும்பங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் பலமுறை மனு கொடுத்தும் பய னில்லை. இதனால் கடந்த நவம்பர் 6 அன்று போராட் டம் நடத்தப்படும் என அறி வித்தனர். இதனை தொட ர்ந்து வருவாய்த் துறை அதிகாரிகள் நேரடியாக பன்னீர் பாக்கம் கிரா மத்திற்கு சென்று பட்டா கொடுப்பதாகவும், கிராம கணக்கில் பதிவேற்றம் செய்வதாக வாக்குறுதி அளித்தனர். மூன்று மாத காலமாகியும் அதிகாரிகள் வாக்குறுதியை நிறை வேற்றவில்லை. இதனால் கிராம மக்கள் பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மீண்டும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம், தமிழ்நாடு வேட்டைக்காரன் பழங்குடி மக்கள் முன் னேற்ற சங்கத்தின் தலை மையில் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
கொருக்குபேட்டை மீனாம்பாள் நகரில் சாலை அமைக்கும் பணி தொடக்கம்
சென்னை, பிப். 4- கொருக்குபேட்டை பகுதியில் சாலை அமைக்கும் பணியை சட்டமன்ற உறுப்பினர் எபினேசர் தொடங்கி வைத்தார். ஆர்.கே.நகர் தொகுதியில் கொருக்குப்பேட்டை மீனாம்பாள் நகர், முத்துமாரியம்மன் கோயில் பகுதியில் 190 குடும்பங்கள் கடந்த 50 ஆண்டுகளாக ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் வசித்து வருகின்றனர்.அந்த பகுதியில் மாநகராட்சி சார்பில் அடிப்படை வசதிகள் செய்வதில் சட்ட சிக்கல் உள்ளது. எனினும் குடிநீர். மின்விளக்கு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் சாலை வசதி இல்லாமல் இருந்தது. சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது அங்கு சாலை அமைத்து கொடுப்பதாக தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்
அமோனியா வாயுக்கசிவு - தொழில்நுட்பக் குழு பரிந்துரைகளை அமல்படுத்த அரசு உத்தரவு
சென்னை, பிப்.4- அமோனியா வாயுக்கசிவு விவ காரத்தில் மாநில மாசு கட்டுப்பாடு வாரியத்திற்கு தனியார் நிறுவனம் இழப்பீடு வழங்கவேண்டும் என்று தமிழக அரசு அமைத்த குழு அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. டிசம்பர் 26 நள்ளிரவு எண்ணூ ரில் உள்ள கோரமண்டல் உரத் தொழிற்சாலைக்கு கடலில் இருந்து செல்லும் அமோனியா குழாயி லிருந்து கசிந்த அமோனியா வாயு எண்ணூரையே கலங்கடித்தது. இத னால் வாயு கசிவு குறித்து ஆராய தமிழக அரசு தொழில்நுட்ப குழு ஒன்றை அமைத்தது. அந்த குழு அரசிடம் தனது அறிக்கையை அளித்துள்ளது. அதில் ," மாசு கட்டுப்பாடு வாரியத்திற்கு சுற்றுச் சூழல் இழப்பீடாக ரூ.5.92 கோடியை உடனடியாக தனியார் நிறுவனம் செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. நிபந்தனைகளை செயல்படுத் தாத தொழிற்சாலைகள் மீது மாசு கட்டுபாடு வாரியம் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலுக்கு அடியில் புதிய குழாய் கள் அமைக்கப்பட வேண்டும். குழாய்க்கு அருகில் அமோ னியா சென்சார்கள் அமைக்க வேண்டும். தொழிற்சாலையை சுற்றியுள்ள கிராமங்க ளில் அவ்வப்போது பாதுகாப்பு ஒத்திகைகள் நடத்த வேண்டும். அரசின் தொழில்நுட்பக் குழு அளித்த பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும்" என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆருத்ரா கோல்டு அதிகம் லாபமீட்டிய நபர்களை தேடும் குற்றப்பிரிவு போலீசார்
சென்னை,பிப்.4- துபாயில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியான அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராஜசேகரை தமிழ்நாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆருத்ரா கோல்ட் டிரேடிங் விவ காரத்தில் ரூ.2,438 கோடி மோசடி தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இதுவரை 23 பேரை கைது செய்துள்ளனர். துபாயில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியான அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராஜசேகரை தமிழ்நாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில் மோசடி பணத்தை பறிமுதல் செய்ய மூன்று விதமான நடவடிக்கைகளில் பொரு ளாதார குற்றப்பிரிவு போலீசார் ஈடுபட்டுள்ள னர். ஆருத்ரா நிர்வாக இயக்குநர்கள் உள்ளிட்டோர் வைத்திருக்கும் நேரடி சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டதை தொடர்ந்து, பினாமி பெயர்களில் உள்ள சொத்துக்கள் அடையாளம் காணப் பட்டுள்ளன. இந்நிலையில், ஆருத்ரா ஏஜென்ட்களிடமும், அதிக லாபம் சம்பாதித்த நபர்களையும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் குறிவைத்துள்ளனர்.
இலவச மாதிரி தேர்வு
விழுப்புரம், பிப்.4- விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான மாதிரி தேர்வு நடக்கவுள்ளதாக மாவட்ட வேலைவாய்ப்பு உதவி இயக்குநர் பாலமுருகன் தகவல் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு தற்போது திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை நடைபெற்று வருகிறது. இதனிடையே மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பாக பிப். 7 முதல் மாவட்ட வேலைவாய்ப்பு மைய அலுவலக வளாகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு தொடங்கி நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு ஏற்கெனவே விண்ணப்பித்த தேர்வு பாடங்கள் முழுவதும் படித்து தேர்வர்கள் இதில் கலந்து கொண்டு பயனடையலாம். மேலும் புதிதாக தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்வதோடு,பயனடைய விரும்பினால் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் அனுப்பவும். இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.
மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
விழுப்புரம்,பிப்.4- தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மானக் கழகத்தின் விழுப்புரம் மின் பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர் சி.லட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:- மின் விநியோகம், மின்வாரியம் தொடர்பான குறைகள், புகார்களைக் மின் நுகர்வோர் தெரிவித்து பயன்பெறும் வகையில் மாதந்தோறும் கோட்டம் வாரியாக குறைதீர் கூட்டங்களை தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மானக் கழகம் நடத்தி வருகிறது. அதன்படி விழுப்புரம் மின் பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர் தலைமையில் கோட்ட அளவில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் அந்தந்த கோட்ட அலுவலகங்களில் நடத்தப்படும். பிப்ரவரி 6, 13 ஆகிய தேதிகளில் விழுப்புரம், கண்டமங்கலம் கோட்ட அலுவலகங்களிலும், பிப். 20 அன்று செஞ்சி கோட்ட அலுவலகத்திலும், பிப். 27அன்று திண்டிவனம் கோட்ட அலுவலகத்திலும் குறைதீர் கூட்டம் நடைபெறும். எனவே, சம்பந்தப்பட்ட கோட்டங்களைச் சேர்ந்த மின் நுகர்வோர், பொதுமக்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறலாம். மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறும் நாள் அரசு விடுமுறையாக இருப்பின் விடுமுறைக்கு அடுத்து வரும் வேலை நாளன்று கூட்டம் நடத்தப்படும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.