பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும், முதலமைச்சர் அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி புதனன்று (நவ.1) மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதன் ஒருபகுதியாக சென்னை மாவட்டம் சார்பில் ரிப்பன் மாளிகை வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட அமைப்பாளர்கள் ம.அந்தோணிசாமி, சாந்தகுமார், சத்யநாதன், கண்ணன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் பேரா.ஜே.காந்திராஜ், பேரா.சோ.சுரேஷ், பெருமாள்சாமி, பார்த்தசாரதி உள்ளிட்டோர் பேசினர்.