சென்னை, செப். 20- பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் ஆகியோரை தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலை வர், ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் கு.தியாகராஜன் சந்தித்து மனு அளித்தார். அதில் அரசு ஊழி யர்கள் மற்றும் ஆசிரியர்க ளின் நீண்ட நாள் கோரிக்கை யான பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு ஊதியம் வழங்கும் நடைமுறை தொடர வேண்டும், 171 தொழிற்கல்வி ஆசிரி யர்களை காலமுறை ஊதி யத்தில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், மேலும் பகுதி நேர ஆசிரியர்கள் மற்றும் ஐஇடி சிறப்பாசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், 2004 முதல் 2006 வரை விடுபட்ட தொகுதிப்பூதிய காலத்தை பணிக் காலமாக முறைப்படுத்த வேண்டும், மருத்துவர்களுக்கு இருப்பது போல் ஆசிரி யர்களுக்கும் பணி பாது காப்பு சட்டத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இடம் பெற்றிருந்தன. இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சரின் கவ னத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். இச்சந்திப்பின் போது சங்கத்தின் மாநிலச் செய லாளர் தி.அருள்குமார் உள்ளிட்ட மாநில நிர்வாகி கள் உடனிருந்தனர்.