காலமானார் சென்னை, ஆக. 24 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மயிலாப்பூர் பகுதிக்குழு உறுப்பினரும், மலர் மருத்துவமனை கட்சி கிளைச் செயலாளருமான ஜெ. இமானுவேலின் தாயார் லலிதா அம்மாள் வெள்ளியன்று (ஆக.23) உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 72. அஞ்சலிக்காக காரப் பாக்கத்தில் வைக்கப் பட்டிருந்த உடலுக்கு கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், மாநிலக்குழு உறுப்பினர் ஏ.பாக்கியம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.குமார், மயிலாப்பூர் பகுதிச் செயலாளர் ஐ.ஆர்.ரவி, மலர் மருத்துவமனை ஊழியர் சங்கத்தின் நிர்வாகிகள் எம்.இன்பரசி, ஆர்.ஏழுமலை உள்ளிட்டோர் மாலை அணி வித்து மரியாதை செலுத்தினர். அன்னாரது உடல் சனிக்கிழமையன்று (ஆக.24) காரப் பாக்கம் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.