சமூக பாதுகாப்புடன் கூடிய வேலைக்கான இயக்கம் (மெஸ்) சார்பில் ஆக.1 அன்று தென்சென்னையில் சிறப்பு மாநாடு நடைபெறுகிறது. இதனையொட்டி சனிக்கிழமையன்று (ஜூலை 29) பெருங்குடியில் ‘யுனைட்’ அமைப்பு சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாநாடு வரவேற்புக் குழுத் தலைவர் க.பீம்ராவிடம், தகவல் தொழில்நுட்பத் துறை ஊழியர்கள் எதிர் கொள்ளும் பணி நெருக்கடி, சவால்கள் குறித்த அறிக்கையை அமைப்பின் நிர்வாகிகள் பரணி, வெல்கின், ஜனனி ஆகியோர் வழங்கினர்.