ராணிப்பேட்டை, நவ. 10 - ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு நகராட்சி 26 ஆவது வார்டு பகுதியில் தேசிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார பணி திட்டத்தின் கீழ் புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா மாவட்ட ஆட்சியர் ச. வளர்மதி தலைமையில் வெள்ளியன்று (நவ. 10) நடைபெற்றது. கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி அடிக்கல் நாட்டினார். இதில் அரக்கோணம் தொகுதி மக்க ளவை உறுப்பினர் எஸ். ஜெகத்ரட்சகன், ஆற்காடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல். ஈஸ்வரப்பன், நகராட்சி நிர்வாக மண்டம இயக்குநர் கு. தனலட்சுமி, மண்டல செயற்பொறியாளர் தி. சுப்பிரமணியன், ஆற்காடு ஆணையாளர் கி.சு. கிருஷ்ண ராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆற்காடு நகர மன்ற தலைவர் தேவி பென்ஸ் பாண்டியன், நகர மன்ற துணைத் தலைவர் எஸ். பவளக்கொடி சரவணன் உள்ளிட்டு நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.