ஓசூர் இரண்டாவது சிப்காட்டில் சிறு-குறுந்த தொழில்கள் சங்க அலுவலகம் முன்பு உயர்மின் கோபுரம் அமைக்க ஏற்பாடுகள் நடந்துவந்து. இதை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ், மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியோரிடம் சங்கத் தலைவர் வேல்முருகன், முன்னாள் தலைவர் ஞானசேகரன் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்றுக்கொண்ட அமைச்சர், உயர்மின் கோபுரத்தை மாற்றி அமைக்க மின்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இதையடுத்து ஓசூர் சிறு குறு தொழில்கள் சங்கத்தின் நிர்வாகிகள் சட்டமன்ற உறுப்பினருக்கும், அமைச்சருக்கும் நன்றி தெரிவித்தனர்.