விழுப்புரம், பிப்.2- விழுப்புரம் நகராட்சி திடலில், மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) இணைந்து நடத்தும், மாபெரும் புத்தக கண்காட்சி மற்றும் விற்பனை பிப்.2 அன்று அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் சி.பழனி, சட்டமன்ற உறுப்பினர் இரா.இலட்சுமணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவா,மாவட்ட வருவாய் அலுவலர் மு.பரமேஸ்வரி, தென்னிந் திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் தலைவர் சேது சொக்கலிங் கம், செயலாளர் எஸ்.கே.முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.