districts

img

குறைந்தபட்ச ஊதியத்தை 25 ஆயிரமாக உயர்த்த வேண்டும்

குறைந்தபட்ச ஊதியத்தை 25 ஆயிரமாக உயர்த்த வேண்டும்  உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சார்பில் செங்குன்றம் பேருந்து நிலையத்தில் ஞாயிறன்று (மே21), துவங்கிய நடைபயண பிரச்சாரம்  திருவள்ளூர் கூட்டு சாலை, முண்டியம்மன் நகர், சுப்பிரமணிய பாரதியார் தெரு ,பாலகணேசன் நகர். ஆலமரம் அலுவலகம். காந்தி நகர்,கே,கே,நகர், தாமரைப்பாக்கம், திருவள்ளூர், மணவாளநகர். ஆகிய இடங்களில் நடைபெற்றது.  இதில் சிஐடியு மாநில துணைப்பொது செயலாளர் எஸ்.கண்ணன், மாநில துணைத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்டத் தலைவர் கே.விஜயன், மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், பொருளாளர் என்.நித்தியானந்தம்  உள்ளிட்ட பலர் பேசினர்.