எழும்பூர் பகுதி, கே.பி. பார்க் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவரை நியமிக்கக் மாதர் சங்கத்தினர் சுகாதார நிலையத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். இதனையறிந்து புளியந்தோப்பு சமுதாய நல மருத்துவமனையில் இருந்து உடனடியாக ஒரு மருத்துவர் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்து மக்களுக்கு சிகிச்சை அளித்தார்.