districts

img

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை மேம்படுத்தவேண்டும்

திருவள்ளூர், அக். 13- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊத்துக்கோட்டை வட்ட 12வது மாநாடு ஞாயிறன்று (அக் 13), பெரியபாளையத்தில் தோழர்கள் என்.சங்கரய்யா, சீத்தாராம் யெச்சூரி நினைவரங்கத்தில் நடைபெற்றது. மாவட்ட குழு உறுப்பினர் த.கன்னியப்பன், வட்ட குழு உறுப்பினர்கள் இ.வேலன், எஸ்.ரம்யா ஆகியோர் தலைமையில் மாவட்ட குழு உறுப்பினர் என்.கங்காதரன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார்.வட்ட குழு உறுப்பினர் பா.அருள் வரவேற்றார். மூத்த உறுப்பினர் கே.செல்வராஜ் கொடி ஏற்றி  வைத்தார். சிபிஎம் மாநில கட்டுப்பாட்டு குழு தலைவர் ப.சுந்தரராசன் துவக்கவுரையாற்றினார். வட்ட செயலாளர் ஏ.ஜி.கண்ணன் வேலை அறிக்கையை முன்வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.சம்பத் வாழ்த்தி பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.பன்னீர்செல்வம் மாநாட்டை நிறைவு செய்து பேசினார்.பெரியபாளையம் கிளை செயலாளர் கே.எஸ்.டார்வின் நன்றி கூறினார். வட்டக்குழு தேர்வு 14 பேர் கொண்ட ஊத்துக்கோட்டை வட்ட குழு செயலாளராக என்.கங்காதரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தீர்மானங்கள்  சுகாதார நிலையத்திற்கு ஒரு ஆம்புலன்ஸ் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்,  திருக்கண்டலம், லட்சிவாக்கம், செஞ்சி அகரம் ஆகிய பகுதிகளில் உள்ள பட்டியலின மக்களுக்கு குடிமனை பட்டா வழங்க வேண்டும், நூறு நாள் வேலை கேட்டு விண்ணப்பித்த அனைவருக்கும் அட்டை வழங்க வேண்டும், ஜனப்பன்சத்திரம் கூடடுச்சாலை முதல் ஊத்துக்கோட்டை வரை சீரழிந்து உள்ள தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க வேண்டும், தண்டலம் முதல் சென்னை உயர்நீதிமன்றம் வரை இயங்கி வந்த தடம் எண் 593 மற்றும் 562 ஆகிய இரண்டு மாநகர பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.