districts

img

எங்கள் மீது கவனமில்லை!

நரிக்குறவர் என பொது வழக்கில் அழைக்கப்படும் ஹக்கி பிக்கி என்ற மக்கள் தமிழ்நாட்டின் வந்தேறி நாடோடி சமூகத்தினர். இவர்கள் கர்நாடகத்தில் ஹக்கி பிக்கி என்றும் ஆந்திராவில் நக்க வாண்டோ என்றும் அழைக்கப்படு கின்றனர்.  இந்தோ-ஆரிய மொழியான வாக்ரிபோலி மொழி பேசும் நரிக்குறவர்கள் தொல் தமிழ் குடிகளான குறவர்களுக்கும் இவர்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என மானுடவியாளர்களின் ஆய்வு கூறுகிறது. உளுந்தூர்பேட்டை-விருத்தா சலம் சாலை அன்னை தெரசா நகரில் நரிக்குறவர்கள் குடியிருப்பு 40 ஆண்டுகளாக உள்ளது. இதில் 32 நரிக்குறவர்கள் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். சுமார் 50 வருடங்களுக்கு முன்னர் இக் குடும்பங்கள் உளுந்தூர்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் பின்புறம் மரத்தடியில் தங்கியும் பல கிராமங்களுக்கு சென்று ஊசிமணி, பாசிமணி வியாபாரம் செய்துள்ளனர். பாரம்பரியமாக இவர்களின் குலதெய்வமான காளியை வணங்கும் பழக்கம் இவர்க ளுக்கு உள்ளது. இந்த நிகழ்ச்சியை வருடம் ஒரு முறை எருமை மாட்டை பலியிட்டு வணங்கும் நிகழ்வாக இங்கு நடந்தேறியுள்ளது. எருமைக்கடா பலியிட்டு காளிக்கு படையலிடும் பூஜையை சுற்றுவட்டாரத்தில் இருக்கும் கிராம மக்கள் வந்து கண்டு களிக்கும் நிகழ்வுகளும் நடந்திருக்கிறது. தற்போது இவர்கள் வழக்க மான நடைமுறைகளை இழந்து கால சூழலுக்கு ஏற்ப அத்தியா வசிய தேவைகளுக்காக குப்பை களில் கிடைக்கும் இரும்பு பொட்டி கள் பிளாஸ்டிக் பொருட்களையும் சேகரித்து வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர். தற்போது இவர்களின் நிலை கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு அரசு கட்டித் தந்த அன்னை தெரசா நகரில் நரிக்குறவர் குடி யிருப்பு உள்ளது. இங்குள்ள வீடுகள் அனைத்தும் மேற்கூரை பெயர்ந்து, சுவர்கள் விரிசல் விட்டு, மின்சார வசதியின்றி எந்த நேரத்தில் இடிந்து விழும் என்ற நிலையில் பராமரிக்கப்படாத நிலையில் உள்ளது. மாவட்ட நிர்வாகம் நகராட்சி நிர்வாகம் இவர்களுக்கு பழைய வீடுகளை இடித்துவிட்டு புதிதாக கான்கிரீட் வீடுகளை கட்டித் தர வேண்டும் என்பது இவர்களது பல நாள் கோரிக்கையாக உள்ளது. இங்கு உள்ளவர்களுக்கு குடி தண்ணீர் கிடைப்பதில்லை நக ராட்சி நிர்வாகத்திடம் மாவட்ட ஆட்சியரிடமும் மனு கொடுத்தும் தீர்வு எதுவும் கிடைக்கவில்லை. தன்னார்வலர்களால் கட்டிக் கொடுக்கப்பட்ட தகர ஷீட்டு குடி யிருப்பில் இப்பொழுது இருக் கின்றனர்.

பள்ளிக்கூடத்தையும்...

எங்கள் பிள்ளைகள் இங்குள்ள அரசு பள்ளிகளில் ஆரம்ப கல்வி வரையில் படிக்கச் சென்றனர். அதற்கு மேல் பிள்ளைகள் பள்ளிக்கூடம் செல்வதில்லை. வறுமை, குடும்ப சூழ்நிலை காரணமாக பிள்ளைகள் படிப்பை தொடர முடியாத நிலை உள்ளது.  பள்ளிக்கூட நிர்வாகம், மாவட்ட கல்வித்துறை பிள்ளைகளின் இடைநிறுத்தம் சம்பந்தமாக எந்த விசாரணைக்கும் வரவில்லை. குடியிருப்பிலிருந்து பிள்ளை கள் பள்ளிக்கூடம்  செல்வ தற்கு வெகுதூரம் செல்ல வேண்டி உள்ளதால் பிள்ளை கள் பள்ளிக்கூடம் செல்வதை தவிக்கின்றனர். பள்ளிக் கல்வி படிப்பு குறித்து அரசு நிர்வாகம் விழிப்புணர்வு அளித்தால் தங்கள் பிள்ளைகளுக்கு கல்வி அறிவு கிடைக்கும் என்பது இவர்கள் கோரிக்கையாகும். வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை எல்லாம் இருந்தும் அரசாங்கத்திடமிருந்து வங்கிக் கடன், உதவி சுய தொழில் கடன்கள் எதுவும் கிடைப்பதில்லை. பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மை யினர் நலத்துறை மூலம் நரிக்குற வர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள உறுப்பினர்களுக்கு விபத்து காப்பீடு கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை, மகப்பேறு உதவித் தொகை மற்றும் முதியோர் ஓய்வூதியம் ஆகிய நலத் திட்ட உதவிகள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறு பான்மையினர் நலத்துறை யின் மூலம் வழங்கப்படும் உதவிகள் கூட இங்குள்ள நரிக்குறவர்களுக்கு கிடைப்பதில்லை.

இங்குள்ள இளைஞர்கள் தொழில் தொடங்க மானிய உதவி கிடைப்பதில்லை. தமிழ்நாடு நரிக்குறவர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள உறுப்பினர்கள் தனியாக தொழில் தொடங்க பதிவு செய்த உறுப்பினர்களுக்கு அல்லது அவரைச் சார்ந்த 18 வயதிற்கும் மேற்பட்ட குடும்ப உறுப்பினருக்கு அதிகபட்சமாக ரூ. 7500 முழு மானியமாக நரிக்குற வர் நல வாரியம் மூலம் வழங்கப்படு கிறது. இந்த சலுகைகள், திட்டங்கள் உதவிகளும் கிடைப்பதில்லை. நரிக்குறவர் நல வாரிய உறுப்பினர் குழுவாக சேர்ந்து தொழில் தொடங்குவதற்கு தனி நபர் தொழில் தொடங்குவதற்கும் மானியமாக ரூ.10,000 வழங்கப்படு கிறது. இது போன்ற சலுகைகள் பற்றி எந்த விபரமும் இந்த மக்களுக்கு தெரிவதில்லை. வங்கிக் கடன் கேட்டு சென்றால் வங்கிக்கு உள்ளே அனுமதியும் கிடையாது. மாவட்ட நிர்வாகம் எந்த வகையிலும் உதவி செய்ய முன் வருவதில்லை. வயிற்று பிழைப்பிற்காக அப்பகுதி இளைஞர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் உண்டி கோல் தயாரிப்பு, பாசிமணி வியாபாரம் செய்து வருகிறார்கள். மேலும் குப்பைகளில் கிடைக்க கூடிய இரும்பு துண்டு கள், பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து பழைய இரும்பு கடையில் போடுவது, சிக்கு முடி வாங்குவது,  சிக்கு முடிக்கு மாற்றாக அலுமினிய பாத்தி ரங்கள் வீடு வீடாகச் சென்று வியாபாரம் செய்து வருகின்றனர். மாவட்ட நிர்வாகமும் அரசும் உளுந்தூர்பேட்டையில் இருக்கும் நரிக்குறவர் மக்களை கவனத்தில் எடுத்துக் கொண்டு அரசின் மூலம் கிடைக்கக்கூடிய கடன் உதவி களையும் சலுகைகளையும் வாங்கிக் கொடுத்தால் சமூகம் கல்வியில், வாழ்க்கையில் முன்னேற வாய்ப்பு உள்ளது என்று அந்த மக்கள் கூறுகின்றனர். உதவி கரம் கொடுக்குமா, மாவட்ட நிர்வாகமும் அரசும்?           - ஜி.சசிகுமார்