districts

img

வள்ளீஸ்வரன் தோட்டத்திற்கு சுற்றுச்சுவர் கட்ட அடிக்கல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோரிக்கையை ஏற்று, வள்ளீஸ்வரன் தோட்டம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு வளாகத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.40 லட்சம் ஒதுக்கி புதனன்று (செப்.4)  கட்டுமானப் பணியை  தொடங்கி வைத்தார். மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் மயிலை த.வேலு, எஸ்.கீதா முரளி எம்.சி., சிபிஎம் தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.குமார், திமுக பகுதிச் செயலாளர் எஸ்.முரளி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.