விழுப்புரம், மார்ச் 27- விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் நடை பெற்ற விவசாயிகள் சங்கத்தின் வட்டக் குழு கூட்டத்தில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட முடிவு செய்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் வட்டக் குழு கூட்டம் செஞ்சியில் மார்ச்.26 அன்று டி.ஆர். குண்டுரெட்டியார் தலைமை யில் நடைபெற்றது, கூட்டத்தில் வரும் மக்களவைத் தேர்த லில் ஆரணி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எம்.எஸ்.தரணிவேந்தனுக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்வது, விவசாயிகள் சங்கம் சார்பில் தீவிர பிரச்சாரம் செய்து என்று தீர்மானித்தனர். கூட்டத்தில் தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.டி.முருகன், மாவட்ட துணை தலைவர் கோ.மாதவன், வட்ட செயலாளர் வி.சிவன், டபுல்யு.ஆல்பர்ட் வேளாங்கண்ணி உள்பட ஏராளமான விவசாய சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.