கடலூர், மார்ச் 3- மூலதன செலவு உருவா னால் தான் மாநிலத்தின் பொரு ளாதாரம் வளரும் என்று மாநில பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு பேசினார். கடலூரில் ரூ.4.43 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பொதுப்பணித்துறை கோட்ட அலுவலகம், உப கோட்ட அலு வலகங்கள் மற்றும் பிரிவு அலு வலக கட்டடங்கள் திறப்பு விழா, கடலூரில் சனிக்கிழமை நடை பெற்றது. மாவட்ட ஆட்சியர் அ.அருண் தம்புராஜ் தலை மையில் நடைபெற்ற விழாவில் அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அமைச்சர் சி.வெ.கணேசன் ஆகியோர் புதிய அலுவலக கட்டடங்களை திறந்து வைத்தனர். அப்போது அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது, திமுக ஆட்சி பொறுப்பேற்ற உடன் கட்டப்பட வேண்டிய அரசு கட்டடிடங்கள் அனைத்தை யும் கட்ட வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டார். அதன்படி தமிழகம் முழுவதும் பொதுப்பணித்துறை சார்பில் கட்டிடங்கள் கட்டப்பட்டு திறப்பு விழா நடத்தப்பட்டு வருகிறது. கடலூரில் பொதுப்பணித்துறை அலுவலகம் ரூ.4.43 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப் பட்டுள்ளது. கடந்த இரண்டரை ஆண்டுகளில் தமிழகத்தில் அதிக அளவில் அரசு கட்டி டங்கள் கட்டப்பட்டுள்ளது. அரசு கட்டிடங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஆட்சி திராவிட மாடல் ஆட்சி. மூலதனச்செலவு அதிகம் செய்து கட்டிடங்கள் கட்டப்படுகின்றது. மூலதன செலவு உருவானால்தான் மாநிலத்தின் பொருளாதாரம் வளரும். அலுவலகத்திற்கு வரும் பொது மக்களிடம் அதி காரிகள் இனிமையாக பேச கற்றுக் கொள்ள வேண்டும். அமைச்சர் சி.வெ.கணேசன் வேண்டுகோளுக்கு இணங்க விருத்தாச்சலத்தில் தற்காலிக கோட்டப் பொறி யாளர் அலுவலகம் உருவாக்கப் படுகிறது என்று கூறினார். விகேடி சாலை குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, விக்கிரவாண்டி- தஞ்சாவூர் 8வழிச்சாலைப் பணியை விரைந்து முடிக்க ஒன்றிய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகக் கூறினார். விழாவில் சட்டமன்ற உறுப்பி னர்கள் கடலூர் கோ.ஐயப்பன், நெய்வேலி சபா.ராஜேந்திரன், விருத்தாச்சலம் எம்.ஆர்.ராதா கிருஷ்ணன் மற்றும் பொதுத் துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்ட னர்.